தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகமானது தமிழக மாவட்டங்களில் 10 அலுவலகங்களையும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 அலுவலகங்களையும் அவற்றின் கீழ் உள்ள 79433 நிறுவனங்களில் பணிபுரியும் 2.05 கோடி சந்தாதாரர்களையும் உள்ளடக்கியது.
இங்கு 2023 24 ஆம் நிதி ஆண்டில் 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 2.74 லட்சம் மனுக்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், 2023-24 ஆம் ஆண்டில் 16062 புதிய ஓய்வூதியதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். இபிஎப்ஓ சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலம் மொத்தம் 3.14 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சேவை செய்கிறது.
2022-2023 ஆண்டில், கட்டணம் செலுத்தத் தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையாக, ரூ.16.14 கோடி வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.275.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
குறைகள் தொடர்பான விஷயங்களில் இந்த மண்டலம், 2022-23 ஆம் ஆண்டு 81,769 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 97,396 உறுப்பினர்கள் / ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது..