தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு.. சென்னையில் இருந்து மதுரைக்கு மக்கள் பெரும் அதிர்ச்சி…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நாளில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, சொந்தபந்தங்களுடன் இணைந்து ஒருவருக்கொரு இனிப்புகளை வழங்கி வாழ்த்து சொல்வது வழக்கம்.

மக்கள் புது துணிகளை வாங்க கடைகளில் குவிந்து வருவதால் துணிக்கடைகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளும் மக்கள் கூட்டத்தால் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமையில் வருவதால் தீபவாளிக்கு மறு நாளான வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை

இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக தமிழக அரசு, ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதேபோல் தெற்கு ரயில்வே மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய ரயில்வேயும் ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் விமானங்களில் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

நேர சேமிப்பை கணக்கில் கொண்டு மக்கள் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறையைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக அனைத்து விமான நிறுவனங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு.. சென்னையில் இருந்து மதுரைக்கு மக்கள் பெரும் அதிர்ச்சி…!

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை