பார்சல் கட்ட தாமதமானதால் ஓட்டல் உரிமையாளரின் கை விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளர்

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் கட்ட தாமதம் ஆனதால் உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலுகம் அருகே ஓட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவரது கடைக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்திச் செல்வது வழக்கம். இதனால் எந்த நேரமும் இவரது கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கும். இவரது கடையில் வேலையாட்கள் யாரும் வைத்துக் கொள்ளாமல் இவரே வேலை செய்து வருகிறார். இதனால் கதிரேசனே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், முஷ்டகுறிச்சியைச் சேர்ந்த வழிவிட்டான் (45) என்பவர் கதிரேசன் ஓட்டலுக்கு வந்து பார்சல் சாப்பாடு கேட்டுள்ளார். சற்று தாமதமாகும் என்று கதிரேசன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வழிவிட்டான் அருகில் இருக்கும் சமையல் கரண்டியால் கதிரேசனை தலையில் பயங்கரமாக அடித்துள்ளார்.
மேலும், கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்தார். இதில் அவரது விரல் துண்டானது. துண்டான விரலை ஓட்டலுக்கு முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயிலே வழிவிட்டான் துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர். கதிரேசனின் துண்டான ஆள்காட்டி விரலின் தேடிப்பார்த்தனர். ஆனால் விரல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வலியில் துடிதுடித்த கதிரேசனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் கை விரலை கடித்து துப்பிய வழிவிட்டானை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பார்சல் கட்ட தாமதமானதால் ஓட்டல் உரிமையாளரின் கை விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.