நேற்று தலைவர் அவர்கள் பங்கேற்ற நிகழ்வுகள்:உயிர்நீத்த தோழர்.கரும்புலி முத்துக்குமார் அவர்கள் நினைவுநாளில் தாய்மண் அலுவலகத்தில் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாய சங்க போராட்ட குழுவினர் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் தலைவர் அவர்களைச் சந்தித்து மதுரை மேலூர் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய போராடியதற்காகவும்,
இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு கிஷன் ரெட்டி அவர்களிடம் கோரிக்கை வைத்ததற்காகவும்நன்றி தெரிவித்தனர்மருதோவியம்மகத்தான கலைஞர் டிராக்ஸ்கி மருதுவைக் கொண்டாடும் முழுநாள் திருவிழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி உரையாற்றினார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் வேங்கை வயல் ப்ரச்சனை பற்றிய கேள்விக்கு பதிலுரைத்தார் .விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பானை சின்னத்தையும் வென்றெடுத்ததை முன்னிட்டு திருச்சியில் கட்சியினர் தலைவரை வரவேற்று கேக் வழங்கி கொண்டாடினர்.திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலப் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






