சென்னை:
சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் ஏராளமான திருநங்களைகள் உள்ளனர். இவர்களில் சிலர் கோவில்களில் பூஜைகள் செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வருகின்றனர். மேலும் சில திருநங்கைகள் பண்டு பிடித்து பணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது. இதில் டேவிட் என்கிற திருநங்கையும் பண்டு பிடித்து வந்ததாகவும் அதில் வசூலான பணத்தை அவர் கூடுதல் வட்டிக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட குளறுபடியில் பண்டுபிடித்தவருக்கு பணம் திரும்ப கொடுக்க முடியாத சூழ்நிலை மனம் உடைந்த டேவில் பலதடவை தற்கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கோதாமேடு பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது. அப்போது டேவிட்டுக்கும் சில திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் நேற்று நள்ளிரவில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவிற்கு பிறகே உண்மை நிலை தெரியவரும்.