திருக்குறள் அதிகாரம்-2
வான் சிறப்பு
வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு.
குறள்:
- வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று உணரற் பாற்று.
குறள் விளக்கம்: என்றும் சாகாத அமிழ்தமாகிய பரிசுத்த ஆவி வான் நின்று உலகத்திற்கு வழங்கி வருதலால் பரிசுத்த ஆவி சாவா மருந்து என உலக மக்களால் உணரத் தக்கதாகும்.
திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் யோவான்:”ஆவியேஉயிர்ப்பிக்கிறது. மாமிசம் ஒன்றுக்கும் உதவாது என்றும் ஏசாயா 44:3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வரண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் எனவும் பரிசுத்த ஆவியானவரின் பொழியே இவ்வுலகில் வாழ்வோருக்கான அருமருந்து எனத்திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்
.






