குறள் 49:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று [1]
விளக்கம்:
- துறவறத்தை விட, மனைவியோடு சேர்ந்து வாழும் இல்லறமே சிறப்பான அறமாகப் போற்றப்படுகிறது.அந்த இல்லற வாழ்க்கையும் பிறர் பழிக்கும்படி இல்லாமல், நல்ல நெறியோடு நடந்தால் அதைவிடச் சிறந்த நற்பயன் வேறில்லை. [1]
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 18:19வரையுள்ள வசனங்கள் “உன் ஊற்றுக்கண்ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு, அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும் அழகான வரையாடும்போலிருப்பாளாக அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி யிருப்பாயாக “என்றும், மல்கியா 2:14-15 கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்.







