குறள் 59 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
இயல்: இல்லறவியல்
பால்: அறத்துப்பால்
குறள் 59:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
விளக்கம்:
புகழுக்குரிய நற்பண்புகள் அமையாத மனைவியைப் பெற்ற கணவனுக்கு, தன்னை இகழ்ந்து பேசுபவர் முன்னால் ஆண் சிங்கம் (அல்லது காளை) போல் கம்பீரமாகவும், தலைநிமிர்ந்தும் நடக்கும் பெருமித நடை இல்லாமல் போய்விடும். தன் மனைவி நல்லொழுக்கமும் புகழும் உடையவளாக இல்லாவிட்டால், சமூகத்தில் அவனால் தலைநிமிர்ந்து வாழ முடியாது என்பது இதன் கருத்தாகும்.
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்





