தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது
“குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் முதலமைச்சர்”எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
.கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவமும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிராகத் தொடரும் பாலியல் குற்றங்களும் தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போயுள்ளதைக் காட்டுகிறது.தேர்தல் பிரசாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வாக்குக் கேட்பதற்கான TOOL-ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்”பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ள முதலமைச்சர், உடனடியாகக் காவல்துறை உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்; தவறினால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட தி.மு.கழகம் தயங்காது.







