குறள் 82

விருந்தினராக வந்தவர் வீட்டின் வெளியே காத்திருக்க, தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும், அது ஒருபோதும் விரும்பத்தக்கது அன்று.
குறள் 82:
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”
விளக்கம்:
- சாவா மருந்து (அமிழ்தம்): உண்டால் இறப்பைத் தடுத்து என்றும் வாழ வைக்கும் அமிழ்தம் போன்ற சிறந்த உணவாக இருந்தாலும்.
- புறத்ததாத் தானுண்டல்: தன்னை நாடி வந்த விருந்தினரை வீட்டின் வெளியே நிற்க வைத்துவிட்டு, தான் மட்டும் உண்பது.
- வேண்டற்பாற்று அன்று: அறநெறிக்கு ஏற்புடையது அல்ல, ஏற்றுக்கொள்ளக் கூடாத ஒன்று.இக்குறள் மூலம் விருந்தோம்பலின் சிறப்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்





