ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக் கேட்டுக்கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டோம்

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்திசிறப்பு தகுதித் தேர்வில் பணிமூப்பு மற்றும் கற்பித்தல் செய்முறைக்கு மதிப்பெண் வழங்கி, அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கைசென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம், பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்வில் இருந்து விலக்களித்துள்ளது. அதேநேரம், ஒய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் பணியில் தொடர வேண்டுமானால், மூன்று ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியைத் தொடர முடியும் என்று தீர்ப்பு வழங்கி ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து அரசிடம் கருத்து கேட்கப்பட்டது. அதிலே ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் 201ஆம் ஆண்டிற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக் கேட்டுக்கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டோம். அப்படியும் தீர்ப்பு வேறுவிதமாக வரும் பட்சத்தில், அனைத்து ஆசிரியர்களையும் கைவிடாமல் அனைவரும் பணியில் தொடரும் வகையில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும், மற்ற மாநிலங்கள் இத்தகைய சூழலை எவ்வாறு கையாளுகின்றன என்பதை எல்லாம் எடுத்துரைத்தோம். சமூக நீதி அடிப்படையிலும் இடஒதுக்கீடு அடிப்படையிலும் தேர்ச்சி மதிப்பெண்ணை அறிவிக்கக் கேட்டுக்கொண்டோம்.அதன் அடிப்படையில், வேலை தேடும் தேர்வர்களுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூக நீதியைக் கடைப்பிடித்து, அதனடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களும் எழுதினர். இதில், பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில், ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குச் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையில், பணிமூப்பிற்கு (Seniority) மதிப்பெண்ணும், பாடம் நடத்தும் தன்மைக்குச் செய்முறை (Practical) மதிப்பெண்ணும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும், அவர்கள் கற்பிக்கும் பாடப் பிரிவிலிருந்தே 80 விழுக்காடு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தோம். இது வேலை தேடுபவர்களுக்கான தேர்வு இல்லை என்பதால், இதில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால், ஒரே சராசரியான மதிப்பெண்ணை வழங்கி அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.

Oplus_16908288

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக் கேட்டுக்கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டோம்

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்