புதுடெல்லி:
நாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் பின்பு, மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அதன்படி இந்த மாதத்திற்கான 99-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது; நாட்டில் 2013-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 5 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது. ஒரு உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள்.
75 ஆண்டுகளில் முதன்முறையாக நாகாலாந்தில் 2 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் அமைச்சரவையில் மந்திரியாகவும் ஆகியுள்ளார். வளர்ந்து வரும் இந்தியாவின் அதிகாரத்துவத்தில் பெண்களின் அதிகாரமும் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





