சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை: வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

சென்னை:
சென்னை பெருங்குடியில் நேற்று இரவு சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் ஜெய்கணேஷ் (33). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெருங்குடி, ராஜா நகர் பகுதியில் வசித்து வந்தார். இவர் நேற்று தனது சக வழக்கறிஞர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு நேற்றிரவு 9 மணியளவில் சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர், வழக்கறிஞர் ஜெய்கணேஷை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் ஜெய்சங்கர் உயிரிழந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் சக வழக்கறிஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் ராயப்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வக்கீல்கள் சங்க தலைவர் ஜெய்சங்கர், கொலையாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த விடமாட்டோம் என்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை: வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,