தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். தொடர்ந்து இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, விரைவில் தனது தலைமையில் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவித்து, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
அப்போது தமிழ்தேசியம் குறித்து விளக்கமளித்துப் பேசிய அவர், தமிழ் தேசியம் என்பது தமிழ் மொழி மற்றும் தமிழ் இன உணர்வை மட்டும் மையப்படுத்தியது அல்ல என்றும், மொழி உரிமை, இன உரிமை மற்றும் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் தேசியவாதக் கருத்தியல் என்றும் விளக்கினார்.
மேலும், இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு மொழி சமூகத்திற்கும் தனித்த தேசிய இன அடையாளம் உருவானது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் இந்திய அரசியலமைப்பு பன்மைத்துவ அடையாளங்களுடன் அனைவரும் இந்தியர்களாக இணைந்து வாழும் தேசியவாதத்தை முன்வைத்ததாகவும், அதையே காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மத அடிப்படையிலான தேசியவாதத்தையும், இந்துராஷ்டிரம் என்ற கருத்தையும் முன்வைப்பதாக விமர்சித்த அவர், அதற்கு மாற்றாக மொழிவழி தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்கும் பன்மைத்துவ தேசியவாதமே தமிழ்த்தேசியம் என்றார்.
மேலும், தமிழ்த்தேசியம் எந்த மொழியையும், மதத்தையும் அல்லது பிற தேசிய இனங்களையும் வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ அல்ல என்றும், தமிழர் அடையாளத்தை பாதுகாத்தபடியே இந்தியாவின் பன்மைத்துவ கூட்டாட்சியை வலுப்படுத்தும் அரசியல் பார்வையே தமிழ்த்தேசியம் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.