சென்னை:
கர்நாடகாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கர்நாடக வனத்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழக மானிய கோரிக்கை வவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று இது குறித்துச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சௌமியா உள்ளிட்டோர் இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், அதன் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரு மாநில எல்லைப் பகுதியில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதால் இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ. 5 லட்சம் இழப்பீடு போதாது என்பதால் தமிழக அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,






