சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.
தென் சென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எம்.குமார், மாவட்ட பொருளாளர் லாரன்ஸ் உள்பட சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமான அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
காவல்துறை சார்பில் சிறந்த அளவில் பாதுகாப்பு வழங்கபபட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினர் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்
சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு






