அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:
அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்து வரக்கூடிய மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
அதேபோல் தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில்முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
15 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், தொழிற்பேட்டையை பொறுத்தவரை மனை ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதல்வர் வழங்கினார். பொதுவாக அரசு சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திட்டபடிகள் ஆகியவற்றை காணொலி காட்சி மூலமாக பிற மாவட்டங்களில் நடக்கக்கூடிய பணிகளை துறை ரீதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.
சிட்கோ தொழிற்பேட்டைகளில் கட்டப்பட்டுள்ள பொது வசதி மையக் கட்டடங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்