தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
குற்றங்கள் தடுப்பதிலும், குற்றங்களுக்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர் பணி இன்றியமையாதது. அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்ட. வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கொலை செய்யப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கேயும் நடக்கக்கூடாது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மிகவும் அவசியமானதும், அவசரமானதுமாகும். ராஜஸ்தானில் வழக்கறிஞர் பாதுகாப்புக்கென சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.