தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
குற்றங்கள் தடுப்பதிலும், குற்றங்களுக்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர் பணி இன்றியமையாதது. அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்ட. வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கொலை செய்யப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கேயும் நடக்கக்கூடாது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மிகவும் அவசியமானதும், அவசரமானதுமாகும். ராஜஸ்தானில் வழக்கறிஞர் பாதுகாப்புக்கென சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்