சென்னை:
சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ணா பல்கலைக்கழக எஸ்.சி./ எஸ்.டி. அரசு ஊழியர்கள் நலசங்கத்தின் சார்பாக மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஊழியர் எல்.தேசிங் பணி ஓய்வு பாராட்டு விழா மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் ராஜம்மாள் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் அண்ணா பல்கலைக்கழக எஸ்.சி./ எஸ்.டி. அரசு ஊழியர்களின் நலசங்கத்தின் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம் நிறுவன தலைவரும், சமூகநீதி காவலருமான ஆதி நந்தன் லெமூரியர், பி.எஸ். அன்பு தாசன் அபயம், தகவல் எக்ஸ்பிரஸ் மாவட்ட தலைமை நிருபர் ஆர்.எம்.அருண்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தகவல் எக்ஸ்பிரஸ் ஊடக பிரிவு புகைபட கலைஞர் சி.சுகுமார், அபயம் ஊடகபிரிவு செயலாளர் சி.கார்த்திகேயன் , அபயம் அருள்முருகன், சட்ட ஆலோசகர் புருஷோத்தமன் அபயம், மாநில ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் பாபு, திண்டிவனம் அபயம் குணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





