தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கந்துவட்டி கொடுமையால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பாவனா (வயது 17). இவர் அதே பகுதியில் வசித்து வரும் பெண்ணிடம் ரூபாய் அறுபதாயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளனர் அசல் தொகைக்கு மேல் இரண்டு மடங்கு அதிகமாக வட்டி கட்டி வந்த நிலையில் இவரது தந்தை திடீரென விபத்தில் இறந்து விட்டார்.
போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் நிலையில் வட்டிக்கு கொடுத்த பெண்மணி அவர்களது வீட்டை ஆக்கிரமித்து வீட்டை பூட்டி கொடுமை செய்து, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பாவனா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிக்கை பெற்றுள்ளார்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






