செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தில் செயல்பட்டு வரும் விமலா இருதயா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி சோனா மேரி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மோகன், பள்ளி தாளாளர் அருட்சகோதரி மெட்டில்டு மேரி கலந்துகொண்டு பள்ளி சார்பாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
பள்ளி மழலைச் செல்வங்கள் மற்றும் மாணவ – மாணவிகளின் இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சி பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்களை கவர்ந்தது. விழாவில்ல் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






