சென்னை:
அரசு விழாக்களில் பங்கேற்கு நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை இழக்கச்செய்து, ஜனநாயகத்தை பிரதமர் மோடி சிதைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





