கர்நாடகா தேர்தல் பரபரப்பு: எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு

பெங்களூரு:
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பெற்றி ஆட்சி கட்டிலில் அமர தீவிர முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பாவை முக்கிய முகமாக பாஜக மேலிடம் முன்னிறுத்தி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலையும் மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா என மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். எதிர்கட்சியான காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில பாஜக அரசு மீது அதிருப்தி இருப்பதால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட மாநில தலைவர்களும், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தீவிர யுக்திகளை வகுத்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கர்நாடாகாவில் இன்று எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். பெங்களூருவில் புகழேந்தி தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தங்களின் ஆதரவை பாஜகவுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதாரவாளர்கள் கர்நாடகா பாஜகவை சந்தித்து ஆதரவு தருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக மாநில பாஜக மற்றும் எடப்பாடி தரப்பு இடையே குழப்பமான சூழல் நிலவிவரும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தற்போது எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். இதற்கு முந்தைய தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சில தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கர்நாடகா தேர்தல் பரபரப்பு: எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.