சென்னை,
இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் எண்ணித் துணிக’ நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பேசிய ஆளுநர், ஆளுநர் ஒரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாகவே பொருள். கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கவர்னர் மாளிகை முன்பு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 12ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக மர்மமானதாக இருக்கின்றன. பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கிறார். குறிப்பாக சனாதானம், வர்னாசிரமத்திற்கு ஆதரவாக பொது மேடைகளில் கவர்னர் பேசியவை அபத்தமானவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை கவர்னர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





