தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும்: வானிலை ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சென்னை:
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களில் தற்போதே ஈரோடு, திருப்பத்தூர் நகரங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் இந்த வெயிலால், நாள்தோறும் பணிக்கு செல்வோர், கட்டுமானத் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை, தரைக்காற்று போன்றவையே இந்த வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்கிறார் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீகாந்த். குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும், வெப்ப அலைகள் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வெயிலை முடிந்த வரையில் தவிர்த்து நிழலில் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்றும், அதனை தவிர்க்கும்பட்சத்தில் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும்: வானிலை ஆராய்ச்சியாளர்கள் தகவல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.