ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சென்னை:
சட்ட மாமேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பல்லாவரம் குளத்தமா நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, முன்னாள் சட்டமன் உறுப்பினர் ப.தன்சிங், தாம்பரம் மாமன்ற உறுப்பினர் ராஜா, பல்லாவரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் தலைவர் பல்லவ வி.மூர்த்தி, ஜெய்பீம் மணி, கிருபாகரன், செல்வராஜ், இதயவேந்தன், சிவசங்கர், ராஜேஸ்கண்ணா, வேலா, ராஜ்குமார், அமிர்தலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் தலைவர் மூர்த்தி பேசும்போது, எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவை முன்னிட்டு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மக்கள் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.