விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான் வெளிப்படை

சென்னை:
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அவரை ஆதரிக்க வேண்டியது இல்லை. அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்ன வெளிப்படையாக கூறினார்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். தற்போது அவர் தீவிரமாக அரசியலில் களம் இறங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அதற்கான வேலைகளை இப்போது தொடங்கி இருக்கிறார் விஜய். அம்பேத்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாளில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு உத்தரவிட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும் அவ்வாறே செய்து வருகின்றனர்.
விஜய் அரசியலில் இறங்கப் போவது உண்மையா என்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்லி ஆனந்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லவில்லை. அதை விஜய் அறிவிப்பார் என்று மட்டும் கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வரப்போகுது என்பது மேலும் உறுதியாகியிருக்கிறது .
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, விஜய் அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை செய்து வருகிறார். நான் இதை வரவேற்கிறேன். விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, நான் விஜய்யை ஆதரிக்க வேண்டியது இல்லை . அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும். எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான் வெளிப்படை

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட