காஞ்சிபுரம்:
கோடை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் காஞ்சிபுரத்தில் மழை பெய்தது. சென்னையில் லேசான மழை பெய்தது.
தமிழகத்தில் இப்போது கோடை காலம் தொடங்கியது. ஆரம்பத்திலேயே வெயில் 107 டிகிரியை தாண்டிக் கொண்டிருக்கிறது. இதனால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கோடை காலத்தின் வெயிலை தணிக்கும் வகையில் சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரத்தில் கோடை மழை பெய்தது. சென்னையிலும் இதன் தாக்கமாக சேலமான மழை பெய்தது.இதனால் இந்த பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.






