இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அவ்வகையில், கடந்த மாதத்தில் (ஏப்ரல்) ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு, ஏப்ரல் 2022ல் அதிகபட்சமாக ரூ.1,67,540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியிருந்தது. அதை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூல் ரூ.19,495 கோடி அதிகம்.
இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தியாக இருக்கும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







