பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஃபெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் சொத்து உரிமையாளர்கள் காசோலை மற்றும் வரைவோலையினை செலுத்தி எளிதாக சொத்துவரி செலுத்தும் முறையினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் இணையதளம், வரிவசூலிப்பாளர்கள், Bharath Bill Payment System, பெருநகர சென்னை மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக Credit Card, Debit Card, Net Banking, QR Code Scan, VPN Address, காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஃபெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்துவரியினை செலுத்தி இரசீதுகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாண்புமிகு மேயர் அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் தானியங்கி இயந்திரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், வட்டார துணை ஆணையாளர்கள் அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.விஷூ மஹாஜன் இ.ஆ.ப., அவர்கள், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு.ந.இராமலிங்கம் அவர்கள், நிலைக்குழுத் தலைவர் (வரிவிதிப்பு (ம) நிதி) திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் அவர்கள், மாநகர வருவாய் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி
செய்தி வெளியீடு






