+2 தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நேற்று +2ம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும்  இருந்து 2023 ம் ஆண்டு 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2023 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்களுக்கு உரிய  மனநல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கான மனநல ஆலோசனைகள் சென்னை, DMS வளாகத்திலுள்ள 104 உதவி மையத்திலிருந்து 20 மனநல ஆலோசகர்கள், முதலமைச்சரின் 1100 உதவி மையத்திலிருந்து 60 ஆலோசகர்கள் மற்றும் டெலிமனாஸ் 14416ல் இருந்து 20 ஆலோசகர்கள் கொண்டு இம்மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாணவர்களை மனநல மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன்படி அனைத்து மாவட்டத்திலும் உள்ள தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி, மாணவர்கள் தவறான முடிவுகள் எடுக்காத வண்ணம் உரிய ஆலோசனை மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்க உரிய நடவடிக்கை  எடுக்கப்படுகிறது.

இதில் அதிக மனஅழுத்தம் உடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கூடுதல் மனநல  ஆலோசனைகள்  மற்றும் தேவைப்படுவோர்க்கு மனநல மருத்துவர்களால் தொடர்ந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அதிக மனஅழுத்தம் உள்ள மாணவர்களை இதன் மூலம் கண்டறிந்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களால் நேரடியாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள இவ்வரசு தொடர்ந்து மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

+2 தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு