சர்வதேச சி-20 மாநாடு 3 நாட்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சி 20 என்பது, ஜி 20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாச்சாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்டவை பற்றி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் 2-ம் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். நிறைவு நாளான நேற்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






