1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். (குறள் : 84)
தங்கள் வீட்டை நோக்கி வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு பேணுகின்றவனது வீட்டில் திருமகள் மனமகிழ்ந்து நிலையாகத் தங்குவான்.







