அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு…….

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை
மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் சார்பில்
மேற்கொள்ளப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நகராட்சி நிருவாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,
இ.ஆ.ப., நேற்று (25.06.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம்
பிரதான சாலையில் நீர்வளத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர்
வடிகால் அமைக்கும் பணி மற்றும் போரூரில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில்
மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் நகராட்சி
நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட
ஏ.ஜி.எஸ். காலனியில் உள்ள நீரேற்று நிலையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச்
செயலாளர் முணைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் வார்டு-186, ஶ்ரீநிவாசா நகர் பிரதான சாலை, வார்டு-187, கார்த்திகேயபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டு, பருவ மழைக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கார்த்திகேயபுரம் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றிடவும், அந்த
பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-68, கார்த்திகேயன் சாலை,
ஜி.கே.எம். காலனி தெரு, வார்டு-69, ஜம்புலிங்கம் சாலை, ஆகியவற்றில்
மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் பருவமழைக்
காலத்திற்கு முன்னதாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்
ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர்
ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்
கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப.,
அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள்,
(மத்திய வட்டாரம்) அவர்கள், திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்),
தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.இராஜேந்திரன், சென்னை பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமைப் பொறியாளர் திரு. வி.ஜி. ராமசாமி,
திரு.வி.க.நகர் மண்டல குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற
உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு…….

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை