இந்திய பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் நிறைவு !

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வந்தடைந்தார். 

9 நாட்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்தார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு தொழில் முனைப்புகளை ஈர்க்கும் பணியிலும் ஈடுபட்டார். 

அப்போது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளிகளை சந்தித்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடன் பல்வேறு உடன்படிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். 

அதன்பின் எகிப்து சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வருகை தரும்படி எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் டெல்லியின் பாலம் விமான நிலையத்தில் மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். 

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இந்திய பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் நிறைவு !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட