பக்ரீத் பண்டிகை அன்று குர்பானி கொடுத்து, சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாமியர்களின் கடமையாக திருக்குரானில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் புனித மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் பக்ரீத் பண்டிகை ஜூன் 28 ம் தேதியான நேற்று கொண்டாபட்டது . அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் இன்று ஜூன் 29 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இறை தூதரான இப்ராஹீமின் தியாகத்தை நினைவு கூர்ந்து, போற்றும் திருநாளே பக்ரீத் பண்டிகையாகும். கருணை, தியாகம், இரக்கம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உணர்த்துவதே ஈகை திருநாளின் முக்கிய நோக்கமாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரெண்டாவது மாதத்தில் வரும் பத்தாவது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. பிறை தெரிவதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் பல நாடுகளில் பக்ரீத் கொண்டாடப்படும் தேதியும், நேரமும் மாறுபடும். இந்தியாவில் ஜூன் 29 ம் தேதியே பக்ரீத் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்தார்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





