செவிலியரை பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம் ! சிறுமிக்கு அலட்சியமாக ஊசி செலுத்திய விவகாரம்….

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்காக சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

கடலுார் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான இவர், 8-ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் சாதனாவை சளி பிரச்சனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து மருத்துவரின் மருந்து சீட்டுடன் சென்ற சிறுமிக்கு, அங்கிருந்த செவிலியர்கள் 2 ஊசிகளை செலுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கருணாகரன் மருந்து சீட்டை பார்க்காமல் என்ன ஊசி செலுத்தினீர்கள் என கேட்ட போது, நாய் கடிக்குத்தான் 2 ஊசி போட்டோம் என செவிலியர்கள் அலட்சியமாக கூறியுள்ளனர்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்த சிறுமி சாதனா, உடனடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கருணாகரன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர் இதனிடையே, சளிப் பிரச்சனைக்காக வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

செவிலியரை பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம் ! சிறுமிக்கு அலட்சியமாக ஊசி செலுத்திய விவகாரம்….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட