சாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்…

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளும், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெறும் இடங்களில் வேலை முடிவுற்ற பகுதிகளில் உள்ள சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடர் ஆய்வு மேற்கொண்டு வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடித்தல், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் இடங்களிலும், இதர சேவைத் துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளிலும் உள்ள சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகளையும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து 28.6.23 அன்று ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கத்தில் வார்டு 156 ல் மதனந்தபுரம், சபரிநகர், வார்டு – 157ல் எம்.ஜி.சாலை, பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கம் மற்றும் முகலிவாக்கத்தில் வார்டு 87 மற்றும் 88 பகுதிகளில் உள்ள கார்த்திகேயபுரம், குமரன் நகர் உள்ளிட்ட தெருக்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் முடிவுற்ற இடங்களில் சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணியினையும், மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஆய்வு செய்தும், சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டிய இடங்களில் விரைந்து பணிகளை மேற்கொண்டு முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது தெற்கு வட்டார துணை ஆணையாளர் அமித், இ.ஆ.ப.,
மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட