கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (1ம் தேதி) சர்வதேச மருத்துவர்கள் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மரு.செல்வ விநாயகம், இணை இயக்குனர் மகப்பேரு மற்றும் குழந்தைகள் நலம் மரு.நிர்மல்சன், துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மரு.மணிமாறன், ஒன்றியக்குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் மாலா இளஞ்செழியன் மற்றும் பலர்.







