கோயில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ க்கள் – அதிகாரிகளை கைது செய்க கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம் !

புதுச்சேரி – பாரதி வீதியிலுள்ள பழம்பெருமை வாய்ந்த காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் வழியே அபகரித்த வில்லியனூர் சார் பதிவாளர் உட்பட 13 பேர் இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகளுக்கு ஆணையிட்ட மேல் அதிகாரிகளோ, இதற்குப் பின்னணியாகச் செயல்பட்ட அரசியல்வாதிகளோ இதுவரை கைது செய்யப்படவில்லை!

குறிப்பாக, மாவட்டப் பத்திரப் பதிவாளர் இரமேஷ், வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல், கோயில் நிலத்தை தனது குடும்பத்தினரின் பெயரில் அபகரித்துக் கொண்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாரின் குடும்பத்தினர் பெயரில் கோயில் நிலம் வாங்கப்பட்டது குறித்த ஆவணங்களை வெளியிட்டும், இன்று செவ்வாய் (04.07.2023) காலை 11 மணியளவில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் சிவ. மு. இராசாராம் தலைமை தாங்கினார். தே. சத்தியமூர்த்தி (தெய்வத் தமிழ்ப் பேரவை), அசோக்ராசு (புதுச்சேரி தெற்கு, செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்), முருகன் (தொரவி செயலாளர், த.தே.பே.), குமார் (ஐவேலி கிளைச் செயலாளர், த.தே.பே.) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளரும், தெய்வத் தமிழ்ப் பேரவை – செயற்குழு உறுப்பினருமான க. அருணபாரதி கண்டன உரையாற்றி, கோயில் நில விற்பனை தொடர்பான ஆவணங்களை வெளியிட்டார்.

நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி பொருளாளர் இளங்கோவன், புதுவை மாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம் தலைவர், பா. சண்முகம், (புதுச்சேரி தலைவர், தமிழர் களம்) கோ. அழகர் , ச. மூர்த்தி (தலைவர், விஸ்வகர்ம முன்னேற்றக் கழகம்), இரா. முருகானந்தம் (தலைவர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்), ஆர். மோகனசுந்தரம் (தலைவர், அகில இந்திய மனித உரிமைகள் கழகம்), து. இரமேசு (புதுச்சேரி செயலாளர், நாம் தமிழர் – தொழிலாளர் நலச்சங்கம்), ஜெ. தனாளன் (பொதுச்செயலாளர், கைவினைஞர் வாழ்வுரிமைக் கட்சி) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா. வேல்சாமி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில், திரளான மெய்யன்பர்கள் பங்கேற்றனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

கோயில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ க்கள் – அதிகாரிகளை கைது செய்க கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம் !

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்