கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் – இந்தியா சம்மன்…

டெல்லி, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக காலிஸ்தான் புலி படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது. இந்த அமைப்பின் தலைவனாக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்தான். ஹர்தீப் சிங் நிஜர் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தான், ஹர்தீப்பை கைது செய்ய இந்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதனிடையே, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டான். கனடாவின் சுரே பகுதியில் ஹர்தீப் கடந்த மாதம் 19-ம் தேதி மர்மநபர் சுட்டுக்கொல்லப்பட்டார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கனடாவின் டொரொண்டோ மாகாணத்தில் இந்திய தூதரகம் நோக்கி காலிஸ்தான் ஆதரவாளர்கள் வரும் 8ம் தேதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக டொரோண்டோ மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. டொரொண்டோவில் ஹர்தீப் சிங் நிஜரை கொன்ற முகங்கள் என்று எழுதப்பட்டு அதன் கீழ் இந்திய தூதரக அதிகாரிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜர் கொல்லப்பட்டதை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில் இந்திய தூதர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லியில் உள்ள கனடா தூதரகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் கனடா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா – கனடா இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என்று செய்தி வந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் – இந்தியா சம்மன்…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு