நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று (5.7.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான வங்கியாளர் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / முதலமைச்சரின் செயலாளர்- 1 நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் / முதன்மை அலுவலர் அஜய் குமார் ஸ்ரீவத்சவா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், நபார்டு தலைமை பொது மேலாளர் சங்கர் நாராயண், துறைச் செயலாளர்கள், காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





