தொடர் தோல்வி: எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி பரபரப்பு போஸ்டர்

நெல்லை :
அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகள் என்று இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே பல்வேறு மோதல்கள் நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது ஒரு பக்கம் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை, இட்டமொழி, மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ‘எட்டு தோல்வி எடப்பாடி’ என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் சி.டென்சிங் சுவாமிதாஸ் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்த பிறகு தொடர்ச்சியாக எட்டு தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது’ என்றும், ‘எட்டு தோல்வி எடப்பாடியாரே! உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்!’ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 8 தேர்தல்கள் விவரமும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர் தோல்வி: எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி பரபரப்பு போஸ்டர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.