பாளையங்கோட்டை:
நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை- பாளயங்கோட்டை- மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாமக சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் சேக் மைதீன் மற்றும் ஏராளமான அரசியர் கட்சியினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.
போராட்டத்தில் கைதாகி சிறைபட்ட பிறகு, சேக் மைதீன் பேசுகையில், மனித நேய ஜனநாயக கட்சி வேண்டுகோளை ஏற்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலில் இதில் பங்கேற்றதாக கூறினார்.
நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து சாதி, மதங்களை சேர்ந்த கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு இதுதொடர்பாக நல்ல முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்றார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






