திருவொற்றியூர்:
மணிப்பூரில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் கொலை வெறி தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் அமைதி நிலவிட, மக்கள் சமாதானத்தோடு வாழ்ந்திட திருவொற்றியூர் புனித பவுலடியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராக் சின்னப்பா அடிகளார் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
2000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பதாகைகளை ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினார்கள். இதில்£ உதவி பங்கு தந்தை பென்னி லாரன்ஸ், பங்கு பேரவை நிர்வாகிகள் ராபின்சன், ராஜ்குமார், விமல் தாஸ், மணிமாலா, ஸ்டீபன், மனோகரன், மைக்கேல், அந்தோணி ராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






