சீமான் திட்டவட்டம் – எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கபோவதில்லை…

ராமநாதபுரம்: வரும் 2024 மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தற்போது 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க முடியாது.

யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் என்ற நிலை உள்ளது. ஆளுநர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். சனாதனக் கோட்பாடு பற்றி பேசாமல் ஆளுநர் அவரது வேலையை பார்க்க வேண்டும். திமுக தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்குவோம் எனறு மக்களிடம் சொல்லியிருந்தது. ஆனால் தற்போது பல நிபந்தனைகளை தி.மு.கு அரசு விதித்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் திமுக, அதிமுக பணத்தை நம்பியே போட்டியிடுகின்றன. திமுக விளம்பர அரசியல் செய்கிறது. தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்து தான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராசேந்திரன், மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார், வெங்குளம் ராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சீமான் திட்டவட்டம் – எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கபோவதில்லை…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட