திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 15. பிறனில் விழையாமை (பிறன் மனைவியை விரும்பாமை)குறள். 143(15-3) “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துஓழுகு வார்” அதாவது, தன்னை நல்லவர் என்று எண்ணித் தாராளமாக பழகி விக்டோரின் மனைவியிடம் தீவினை செய்வதை வரும்பிநடப்பவர் செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 6:28-29ல் ” தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.” என்றும், நீதிமொழிகள் 6:32ல் “ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.” என்றும் திருக்குறளும்திருமறையும் பிறனில் விழாமை எனும் பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி, எம்.ஏ.,எம். பில். திருக்குறள் உண்மை உரை பேரவை.

Read More »