அடுத்த ஆண்டு 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பூவிருந்தவல்லி சட்டமன்றத தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தொடரும் புரட்சி பாரதம் கட்சி, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதி ஒதுக்கும் என புரட்சி பாரதம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






