சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பட்டியிலின இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், திருநெல்வேலியில் என்றும் சாதிய தாக்கம் அதிகம் உள்ளது. சாதிய படுகொலைகள் திருநெல்வேலியில் தொடர்ந்து அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழிக்க வேண்டும் என்றால் கடும் சட்டங்கள் தேவைப்படுகிறது என கூறினார். மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். சாவர்கர் என்ற கோழையை பற்றி பேசும் கூட்டத்திடம் சங்கரய்யாவை பற்றி பேசினால் அவருக்கு எப்படி தெரியும். இந்த பட்டத்தை கொடுத்து என்ன பெருமையை தேடி கொடுத்திவிடப்போகிறார்கள். பல கோடி இளைஞர்கள் மக்கள் மனதில் வாழும் சங்கரய்யாவுக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும் என தெரிவித்தார். நடிகர் விஜய அரசியல் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், நடிகர் விஜய் நிலைப்பாட்டை எடுக்கும்போது பேச வேண்டும். அவர் என்ன கொள்கையை எடுத்து வைக்கிறார் என்று தெரியாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார்.
நான் தத்துவத்தை நம்பி தனித்துவத்தோடு நிற்கின்றேன். கோட்பாடுகளை நம்பிக்கையோடு உள்ளேன். எங்கள் கோட்பாடு பிடித்த யார் வந்தாலும் அவர்களை ஏற்ப்போம் என சீமான் தெரிவித்தார்.







