சென்னை பல்லாவரம் கிழக்கு குளத்துமாநகர் பல்லவமலை அருள்நிலை புத்தர் ஆலயத்தில் வைசாக பௌர்ணமி தினத்தன்று பகவன் புத்தர் பிறந்த நாளாகவும் பகவன் புத்தர் மெய்ஞானம் பெற்ற நன் நாளாகவும் பகவன் புத்தர் அவர்கள் பரிநிப்பானம் அடைந்த நாளாகவும் இவ்வைசாக பௌர்ணமி முழுநிலவு கூடலை மேற்சொன்ன மூன்று நிலைகளில் விழாவினை சிறப்பிக்கப் பல்லவ வி மூர்த்தி அவர்களின் தலைமையில் வணக்கத்திற்குரிய தம்மாச்சாரி அய்யா திரு, சம்பத் அவர்கள் இவ்விழாவினை திரி சரணம் பஞ்சசீலம் சொல்லி விழாவினை துவக்கிவைத்தார்கள்.
இவ்விழாவில் சிறப்பழைப்பாளராக முன்னாள் பல்லவபுரம் நகர மன்ற துணைத் தலைவர் ஜெய் என்கின்ற த.ஜெயப்பிரகாஷ் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கி சிறப்பித்தார்கள்.
திரு,செல்வராஜ் திரு,C.செல்வம் திரு,பா.சு,மணி திரு,கிருபாகரன், காஞ்சி மாமல்லன் திரு,நெடுஞ்செழியன் திரு,ஜீவாசரவணன், பல்லாவரம் ராஜேஷ் பெருங்களத்தூர் அகில இந்திய தம்மசேன ஆனந்த புத்த விகார் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்









